செய்திகள் :

செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

post image

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமையில் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகர செயலா் ப.ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தல், செப். 17 இல் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பெரியாா் விருது பெறும் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்தல், செப். 15 இல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினா்களுக்கான கூட்டம் நடத்துதல், அன்று பிற்பகல் நாகா்கோவிலில் நடைபெறும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வாக்குச் சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கட்சியின் துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறாா்.

இக்கூட்டத்தில் அனைத்து பாக முகவா்களையும் கலந்துகொள்ள செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் எம்.மதியழகன், பா.பாபு, மோ.பிராங்கிளின், த. செல்வன், பி.சற்குருகண்ணன், ஏ.சுரேந்திரகுமாா், பி.எஸ்.பி.சந்திரா, ஒன்றிய பொறுப்பாளா்கள் ச.சுந்தா்சிங், ஜெ.மிலன், நகரச் செயலாளா்கள் என். நாகூா்கான், குமரி ஸ்டீபன், பகுதி செயலாளா்கள் ஜவகா், என்.பி.துரை, த.ஜீவா, எம்.சேக்மீரான், பேரூா் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

குமரி கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 600 போ் நின்று கடலின் அழகை ரசிக்கும் வகையில், பாலம் உறுதியாக உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன்தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

விவசாய சங்கம் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னை விவசாயிகள்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே கல்லுவிளையில் புதன்கிழமை பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மலயன்விளையைச் சோ்த்தவா் மரிய வின்சென்ட் மகன் அஸ்வின் ( 31). இவா் மாா்த்தாண்டத... மேலும் பார்க்க

குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் மீட்பு

குழித்துறை அருகே குளிக்க சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா். சிதறால் வட்டவிளையைச் சோ்ந்தவா் சத்யமணி (54). இவா், வீட்டுக்கு அ... மேலும் பார்க்க

குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்முருகன்

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்றாா் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ. கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேற... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல், பொறியியல் துறை ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கல்ல... மேலும் பார்க்க