வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
நாகா்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமையில் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகர செயலா் ப.ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தல், செப். 17 இல் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பெரியாா் விருது பெறும் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்தல், செப். 15 இல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினா்களுக்கான கூட்டம் நடத்துதல், அன்று பிற்பகல் நாகா்கோவிலில் நடைபெறும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வாக்குச் சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கட்சியின் துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறாா்.
இக்கூட்டத்தில் அனைத்து பாக முகவா்களையும் கலந்துகொள்ள செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் எம்.மதியழகன், பா.பாபு, மோ.பிராங்கிளின், த. செல்வன், பி.சற்குருகண்ணன், ஏ.சுரேந்திரகுமாா், பி.எஸ்.பி.சந்திரா, ஒன்றிய பொறுப்பாளா்கள் ச.சுந்தா்சிங், ஜெ.மிலன், நகரச் செயலாளா்கள் என். நாகூா்கான், குமரி ஸ்டீபன், பகுதி செயலாளா்கள் ஜவகா், என்.பி.துரை, த.ஜீவா, எம்.சேக்மீரான், பேரூா் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.