செய்திகள் :

கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துறை இறுதி மரியாதை

post image

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சுல்தான் (87). கோவை மக்களால் ‘சுல்தான் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர். கோவையின் பரபரப்பான டவுன்ஹால், உக்கடம் பகுதி வழியாக செல்லும் பலருக்கும் சுல்தானை நன்கு தெரிந்திருக்கும்.

கோவை சுல்தான் தாத்தா

அவர் பெரியகடை வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜமாத் மசூதியில் தூய்மைப் பணியைச் செய்து வந்தார். அங்கு பணி முடிந்ததும் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்தைச் சரி செய்து வந்தார். 

இவரின் சமூக அக்கறையைப் பார்த்து காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்வது தொடர்பான பயிற்சியைச் சுல்தானுக்கு வழங்கியிருந்தனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடும் டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அதிகமாக இருக்கும்.

காவல்துறை இரங்கல்

சுல்தானின் மகன் மற்றும் மகள் சற்று தொலைவில் இருப்பதால் அவர், பெரும்பாலும் மசூதியில்தான் தங்குவார். மழை, வெயில், இரவு, பகல் பாராமல் காவல்துறைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு அண்மைக்காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

காவல்துறை இரங்கல்

அவரின் மறைவு கோவை பொது மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நேரடியாக சென்று அவரின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் ... மேலும் பார்க்க

`உணவின்றி' ரஷ்ய ராணுவத்தில் வாடும் இந்திய இளைஞர்கள் - ரஷ்யாவின் குறி, இந்திய அரசின் முயற்சி

ரஷ்யா–உக்ரைன் போரில் சண்டையிட இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துக் கொண்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.இவ்வாறு ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்திய இளைஞர்கள் ச... மேலும் பார்க்க

``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்து ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் எடப்பாடி பழனிசாமி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி... மேலும் பார்க்க

``இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில் முடிய வேண்டுமெனில்'' - அமெரிக்காவின் நிபந்தனை

இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருப்பதாக, இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பதிவிட்டிருந்தனர் நேற்று பீகாரில் பேசிய இ... மேலும் பார்க்க

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினமான நேற்று காலை முதல் அவரது நினைவிடத்தில் அனைத்து க... மேலும் பார்க்க