செய்திகள் :

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினமான நேற்று காலை முதல் அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல்சேகரனின் நினைவிடத்தில் அவரது வாரிசுகள் மற்றும் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதலாவதாக அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, நவாஸ்கனி எம்.பி,  எம்.எல்.ஏ-க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி அஞ்சலி
இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் காங்கிரஸ் அஞ்சலி
இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் டி.டி.வி தினகரன்

இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த  துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களையும் விழா ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி மூலம் பெயர் சொல்லி வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, மணிகண்டன், கட்சி நிர்வாகிகள் எம்.ஏ.முனியசாமி, நிறைகுளத்தான், சதன் பிரபாகர் உள்ளிட்டோர் ஏராளமான தொண்டர்களுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது அதிமுக-வினரின் பெயரை விழா குழுவினர் ஒலிபெருக்கியில் கூறாமல் தவிர்த்தனர். இதையடுத்து விழா குழுவினரிடம் அதிமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதன் பின் அதிமுக-வினர் பெயரை ஒலிபெருக்கியில் கூறினர். இதனை தொடர்ந்து அதிமுக-வினர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சீமான் அஞ்சலி
த.வெ.க நிர்வாகிகள் அஞ்சலி

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டத்தில் பிரசாரம் பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என பேசியிருந்தார். இதனால் தேவேந்திர சமுதாய அமைப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சாதிய பாகுபாட்டுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக-வினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக-வின் பெயரை சொல்லாமல் புறக்கணித்த அவர்கள், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனின் பெயரை வைக்க அதிமுக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் அங்கு வந்த அமமுக-வினர் இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கட்சி தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்தினர். மாலையில் தனது கட்சி தொண்டர்களுடன்  வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான்

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்க... மேலும் பார்க்க

பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. 'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளை... மேலும் பார்க்க

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க