செய்திகள் :

நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?

post image

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளைப் பொழிந்து வருகிறது.

இன்னொரு பக்கம், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்ரேலுக்குள் சென்று, அங்கு தாக்குதல் நடத்துகிறது.

இந்த இரு பக்கத்திலுமே, அரசாங்கத்தை விட, மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.

போரினால் மட்டுமல்லாமல், பாலஸ்தீனத்தில் பசியாலும் மக்கள் இறந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பாலஸ்தீனத்தில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது நெதன்யாகு அரசு.

காசாவை விட்டு வெளியேறும் காசா மக்கள்
காசாவை விட்டு வெளியேறும் காசா மக்கள்

நெதன்யாகுவின் எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை, காசா மக்களை அவர்களது பகுதியிலிருந்து வெளியேறுமாறு நெதன்யாகு எச்சரித்திருந்தார்.

இதையொட்டி, காசா மக்கள் தற்போது தங்களது பகுதியிலிருந்து கொத்து கொத்தாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

உணவுப்பொருள் தொடங்கி எரிபொருள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் பாலஸ்தீனத்தில் தாறுமாறாக உள்ளது.

போரினால் ஏற்கெனவே பாலஸ்தீன மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. பொருளாதாரமும் அடிவாங்கியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் தங்களது குடும்பத்தை இடம்பெயர்த்து அழைத்துச் செல்வது மிகக் கடினம். இதையும் தாண்டி, காசாவைத் தாண்டிய வெளியிடங்களில், ஏற்கெனவே வெளியேறிய மக்கள் தஞ்சமடைந்துவிட்டதால், இப்போது காசாவில் இருந்து கிளம்பியுள்ள மக்களுக்கு இடமில்லை.

மேலும், அவர்கள் தஞ்சம் புகும் இடங்களிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.

இந்த மக்கள் எங்கேதான் செல்வார்களோ?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்துக்கு பெயர்மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்... மேலும் பார்க்க

சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உப... மேலும் பார்க்க

``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தின... மேலும் பார்க்க

அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

US: ட்ரம்பின் நெருங்கிய நண்பர், வெற்றிக்கு பங்காற்றியவர் சுட்டுக் கொலை - `சார்லி கிர்க்' யார்?

சார்லி கிர்க் - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 'அமெரிக்கன் கம்பேக் டூர்' (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு... மேலும் பார்க்க