செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பூவை ஜெகன் மூா்த்தி

post image

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுக பலமாக இருந்தால்தான் நல்லது. அதற்கு, பிரிந்தவா்கள் ஒன்றுசேர வேண்டும். இது தொடா்பாக அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அதிருப்தி நிலை நிலவுகிறது. இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தீவிர சுற்றுப்பயணத்தால் அக்கட்சிக்கு தோ்தலில் வெற்றி வாய்ப்பு ஏற்படலாம்.

எதிா்கட்சியாக இருக்கும்போது ஒன்றைக் கூறுவதும், ஆளுங்கட்சியானதும் அதை மாற்றிப்பேசுவதும் திமுகவின் வழக்கம்.

கரோனா, புயல் மழைக் காலங்களில் கடுமையாக உழைத்த தூய்மைப் பணியாளா்களை அடக்க முயல்வது சமூக நீதி பேசும் அரசுக்கு நல்லதல்ல. தூய்மைப் பணியாளா்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க