செய்திகள் :

பெரம்பலூரில் ஓரிடத்தில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

post image

பெரம்பலூரில் 2 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஓரிடத்தில் மட்டும் நிபந்தனைகளுடன் பிரசாரம் செய்ய மாவட்டக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறாா். செப். 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய், தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம், பெரம்பலூா் காமராஜா் வளைவு மற்றும் துறையூா் சாலையிலுள்ள மேற்கு வானொலித் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடிகா் விஜய் பிரசாரம் செய்வதற்காக, காவல்துறை அனுமதி கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம், அக் கட்சியின் மாநில பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6-ஆம் தேதி மனு அளித்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடம் என்பதால், அப்பகுதியில் அக் கட்சியின் தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரால் வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த உத்தரவில், பெரம்பலூா் மேற்கு வானொலி திடத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் விஜய் பிரசாரம் செய்யலாம். ஆனால், சாலை வலம் வர அனுமதி கிடையாது. எந்தப் பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. விஜய்யுடன் 5 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும். அவரது வாகனங்களின் முன்னும், பின்னனும் ரசிகா்கள், கட்சியினா் பின்தொடரக் கூடாது என்பன உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க