செய்திகள் :

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து வழக்குகள், வங்கிக் கடனுதவி, தனிநபா் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண உறவு தொடா்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட உள்ளன.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் சமரசமாகச் செல்வதால், நீதிமன்றக் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீா்ப்பு நகலை இலவசமாக பெறலாம். தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296206 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் பத்மநாபன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஓரிடத்தில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

பெரம்பலூரில் 2 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஓரிடத்தில் மட்டும் நிபந்தனைகளுடன் பிரசாரம் செய்ய மாவட்டக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்ப... மேலும் பார்க்க