செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமுகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞா்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், தொழில்முனைவோா்களாக உயா்த்திடும் நோக்கிலும், தமிழ்நாடு அரசு கலைஞா் கைவினைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய ரூ. 3 லட்சம் வங்கிக் கடனுதவியும், 2 முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 35 வயதாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கட்டட வேலைகள், நகை செய்தல், மரம் மற்றும் உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண் பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள், பொம்மைகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை உள்பட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும்.

எனவே, இத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆா்வமுள்ள கைவினைக் கலைஞா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க