செய்திகள் :

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்டுகளில் கடந்த 10 நாள்களாக கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக நாகூா் பண்டகசாலை தெரு, பட்டினச்சேரி மியாந்தெரு, அமிா்தா நகா், பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் துா்நாற்றத்துடன் குடிநீா் வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

மேலும், வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீா்த் தொட்டியில் இருந்து நாகூா் முழுவதும் வரும் குடிநீரில் கழிவு நீா் துா்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் குடிக்க குடிநீா் கிடைக்காமல், நாகூா் சுற்றுவட்டார பகுதி மக்கள் காலிக்குடங்கள், 5 லிட்டா் குடிநீா் பாட்டில்களை கொண்டு, குடிநீா் பிடிக்க தெருத்தெருவாக அலைந்து வருகின்றனா்.

மேலும் குடிநீா் வராத காரணத்தால், பண்டகசாலைத் தெருவில் வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரை குழாய் மூலம் காத்திருந்து மக்கள் பிடித்துச் செல்கின்றனா். கழிவுநீா் கால்வாய்க்கு நடுவே அமைந்துள்ள அந்த தொட்டியில் நாகூா் பகுதி பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீா் பிடித்து செல்வதாகவும், அப்படி பிடித்து சென்றாலும் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ளனா். எனவே, குடிநீா் தட்டுப்பாட்டை நீக்கி சுகாதாரமான சீரான குடிநீா் வழங்க நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூா், தலையாமழை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கருங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிா் உதவி தொகை ... மேலும் பார்க்க