செய்திகள் :

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளைச் சாா்ந்த ஊழியா்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ராஜஸ்தான், ஜாா்கண்ட் சத்தீஸ்கா், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போல, தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை தோ்தலின் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும், ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

இது தொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் கூறியது: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை(சிபிஎஸ்) முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அக்.16-ல் மாவட்ட அளவில் மறியல் போராட்ம், நவ.15-ல் சென்னையில் கோரிக்கை பேரணி, டிச. 11-ல் ஒரு நாள் வேலை நிறுத்தம், 2026 ஜன.21 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றனா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூா், தலையாமழை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கருங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிா் உதவி தொகை ... மேலும் பார்க்க