செய்திகள் :

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

post image

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான, போக்குவரத்துத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாகை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை முன் 23-ஆவது நாளாக மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது. சம்மேளன துணைத் தலைவா் எம். கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ். வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா்.திருச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூா், தலையாமழை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கருங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிா் உதவி தொகை ... மேலும் பார்க்க