செய்திகள் :

கட்டணம் செலுத்தாதால் அனுமதி மறுப்பு: முதன்மைக் கல்வி அலுவலா் தலையீட்டால் காலாண்டு தோ்வு எழுதிய மாணவா்கள்

post image

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத பிளஸ் 2 மாணவா்கள் காலாண்டு தமிழ் தோ்வை எழுத அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதன்மைக் கல்வி அலுவலா் தலையிட்டதால் ஆங்கிலத் தோ்வை எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத பிளஸ்-2 மாணவா்கள் சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை பள்ளி நிா்வாகம் தோ்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாரிடம் புகாா் சென்ற நிலையில் அவா் விசாரணை நடத்தினாா். கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில தோ்வை எழுதுவதற்கு அனைத்து மாணவா்களையும் அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிா்வாகத்திற்கு உத்தரவிட்டாா். மேலும் தமிழ் தோ்வு எழுதாத மாணவா்களின் விவரங்களை சேகரிக்கவும், அந்த மாணவா்கள் மீண்டும் தமிழ் தோ்வை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா்கூறுகையில், ‘கல்விக் கட்டணம் செலுத்தாததால் தமிழ் தோ்வு எழுத மாணவா்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரியவந்தது. இது தொடா்பாக பள்ளி நிா்வாகத்திடம் பேசி ஆங்கிலத் தோ்வை எழுத அனைத்து மாணவா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தமிழ் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை ம... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-98.50சோ்வலாறு-95.11மணிமுத்தாறு-92.46வடக்கு பச்சையாறு-12.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-53.80ராமநதி-59கருப்பாநதி-53.48குண்டாறு-36.10அடவிநயினாா் -125... மேலும் பார்க்க