செய்திகள் :

``இனி பாலஸ்தீனம் என்ற பகுதியே இருக்காது'' - காசாவை அச்சுறுத்தும் நெதன்யாகுவின் பேச்சு, செயல்

post image

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), காசா மக்களைத் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்திருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

நெதன்யாகு என்ன பேசியிருக்கிறார்?

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடைபெற்ற குடியேற்றத் திட்ட கையெழுத்து விழாவில் பேசிய நெதன்யாகு, “இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது. இது நமக்குச் சொந்தமான இடம்,” என்று தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு
நெதன்யாகு

நாளுக்கு நாள் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

பாலஸ்தீனம் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளது; அதனைச் சரி செய்யவே தாக்குதல் நடத்துகிறோம் என்று இஸ்ரேல் கூறுகிறது.

இந்நிலையில், நெதன்யாகு இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இஸ்ரேலின் நகர்வுகள்

பாலஸ்தீனம் இன்னும் பரவலாக நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இஸ்ரேலின் அத்துமீறலுக்கு எதிராகவே இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீனத்தை முற்றிலும் காலி செய்யும் நோக்கில், அங்குள்ள மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக உள்ளது இஸ்ரேல் அரசு.

மேலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், இந்த வாரம் கத்தார் நாட்டின் மீது நடத்திய தாக்குதலும் ஒன்று.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK: ``மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது'' - விஜய் சுற்றுப்பயணம் குறித்து ஆதவ் அர்ஜுனா

விஜய் சுற்றுப்பயணம்2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ... மேலும் பார்க்க

``விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' - டாக்டர் கிருஷ்ணசாமி

"தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும்; விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால், கூட்டணி குறித்து பரிசீலிப்போம்," என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.டாக்டர் கிருஷ்... மேலும் பார்க்க

'ஆம், அந்த விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான்!' - அண்ணாமலை விளக்கம்

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்து பல கருத்துகள் எழுந்து வந்த நிலையில், அதற்கான விளக்கம் அளித்து அறிக்கை... மேலும் பார்க்க

'சதிவேலை' வழக்கில் முன்னாள் அதிபர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கொதிக்கும் அமெரிக்கா!

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிரேசில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தான் ... மேலும் பார்க்க

Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் ... மேலும் பார்க்க