செய்திகள் :

'சதிவேலை' வழக்கில் முன்னாள் அதிபர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கொதிக்கும் அமெரிக்கா!

post image

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

2022-ம் ஆண்டு, பிரேசில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தான் அதிபர் பதவியிலேயே தொடர வேண்டும் என்ற ஆசையில், போல்சனாரோ சதிவேலையில் ஈடுபட்டார்.

அந்த வழக்கில் தான் தற்போது போல்சனாரோவிற்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

என்னென்ன சதிவேலைகள்?

2022-ம் ஆண்டு நடந்த தேர்தல் பரவலாக சந்தேகத்தைக் கிளப்பியது, தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டது, ராணுவக் கிளர்ச்சியைக் கிளப்ப முயற்சி செய்தது போன்றவை அவர் செய்த சதிவேலை குற்றச்சாட்டுகள் அடங்கும்.

மறுக்கும் போல்சனாரோ

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. பிரேசிலியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பை அடுத்த 60 நாள்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உச்ச நீதிமன்றம் வெளியிடும். அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால், அது தீர்ப்பு வெளிவந்த 5 நாள்களுக்குள் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பு பெரும்பாலும் மாறாது என்று அந்த நாட்டின் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுவே முதல்முறை

பிரேசிலில், தேர்தலில் சதிவேலை செய்யப்பட்டதாக அதிபராக இருந்த ஒருவருக்கு எதிராக தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கொதிக்கும் அமெரிக்கா

இவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பிற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பு, 'மிகவும் மகிழ்ச்சியற்ற ஒன்று' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்க் ரூபியோ, இந்தத் தீர்ப்பை, 'சூனிய வேட்டை' என்ற தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரேசில் அதிபர் லூலா ட்ரம்ப் வரிக்கு எதிராக செயல்பட்டு வரும் வேளையில், போல்சனாரோ அமெரிக்க ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK: ``மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது'' - விஜய் சுற்றுப்பயணம் குறித்து ஆதவ் அர்ஜுனா

விஜய் சுற்றுப்பயணம்2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ... மேலும் பார்க்க

``விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' - டாக்டர் கிருஷ்ணசாமி

"தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும்; விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால், கூட்டணி குறித்து பரிசீலிப்போம்," என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.டாக்டர் கிருஷ்... மேலும் பார்க்க

'ஆம், அந்த விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான்!' - அண்ணாமலை விளக்கம்

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்து பல கருத்துகள் எழுந்து வந்த நிலையில், அதற்கான விளக்கம் அளித்து அறிக்கை... மேலும் பார்க்க

``இனி பாலஸ்தீனம் என்ற பகுதியே இருக்காது'' - காசாவை அச்சுறுத்தும் நெதன்யாகுவின் பேச்சு, செயல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), காசா மக்களைத் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்திருந்தார் இஸ்ரேல் பிரதமர... மேலும் பார்க்க

Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் ... மேலும் பார்க்க