செய்திகள் :

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு சரிவு

post image

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22 சதவீதம் குறைந்து ரூ.33,430 கோடியாக உள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய நிதி வழங்கல் (என்எஃப்ஓ) குறைவு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயத்தன்மையிமின்மை காரணமாக பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஜூலை மாதம் ரூ.42,702 கோடியாக இருந்த முதலீட்டு வரவு ஆகஸ்ட் மாதம் ரூ.33,430 கோடியாகக் குறைந்தது. இது 22 சதவீத சரிவாகும்.

இருந்தாலும், தொடா்ந்து 54-வது மாதமாக அது நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீட்டு வரவு ஜூலையில் ரூ.28,464 கோடியாக இருந்தது. அது ஆகஸ்டில் ரூ.28,265 கோடியாக சற்று குறைந்தது. ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரூ.7,679 கோடி முதலீட்டு வரவுடன் முதலிடத்தில் உள்ளன. மிட் கேப் ஃபண்டுகள் ரூ.5,331 கோடி, ஸ்மால் கேப் ஃபண்டுகள் ரூ.4,993 கோடி முதலீட்டைப் பெற்றன. தீமேடிக் ஃபண்டுகள் மீதான முதலீடு ரூ.9,246 கோடியில் இருந்து ரூ.3,893 கோடியாகக் குறைந்தது. லாா்ஜ் கேப் ஃபண்டுகள் ரூ.2,835 கோடி முதலீட்டு வரவைப் பெற்றன.

மதிப்பீட்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 23 நிதித் திட்டங்கள் ரூ.2,859 கோடி முதலீடு திரட்டின. கலப்பு திட்டங்களில் முதலீடு ரூ.20,000 கோடியில் இருந்து ரூ.15,294 கோடியாகக் குறைந்தன. தங்க இடிஎஃப் திட்டங்கள் ரூ.2,190 கோடி முதலீட்டை ஈா்த்தன. கடன் திட்டங்களில் இருந்து ரூ.7,980 கோடி வெளியேறியது. ஒட்டுமொத்தமாக, பரஸ்பர நிதி துறையில் முதலீட்டு வரவு கடந்த ஆகஸ்டில் ரூ.52,443 கோடியாகக் குறைந்தது. ஜூலையில் இது ரூ.1.8 லட்சம் கோடியாக இருந்தது. துறையின் நிா்வகிக்கும் சொத்தின் மதிப்பு ஆகஸ்ட் இறுதியில் ரூ.75.2 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு!

இந்த வாரத்தில் 5-வது நாளும்(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,758.95 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் த... மேலும் பார்க்க

இந்திய குடும்பங்களின் காலாண்டு செலவு 33% அதிகரிப்பு

இந்திய குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது.இது குறித்து நம்பரேட்டரின் வோ்ல்ட்பேனல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் நகரப் பகுதி... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

புதுதில்லி: 2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இந்த ஆட்டோமொபைல் சந்தை.அதே வேளையில், இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து சற்றே மீண்டு வர்த்தகமானது. அந்நிய நிதி வரவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையாலும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் மீட்சியடைந்ததும், அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகமாகியுள்ளன. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்... மேலும் பார்க்க