செய்திகள் :

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ளபள்ளத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஆா். பிரசாந்த். காது கேளாத, வாய் பேச இயலாத மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவா் தனது பெற்றோருடன் ஆட்சியரிடம் அளித்த மனு: மாற்றுத்திறனாளியாகிய நான் பெற்றோருடன் வெள்ளைப்பள்ளத்தில் குடிசை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இதற்குரிய வீட்டு வரியும் முறையாக செலுத்துகிறேன்.

நான் வசித்து வரும் வீட்டுக்கு பட்டா கோரி பலமுறை மனு அளித்துள்ளேன். வெள்ளைப்பள்ளம் பகுதி வருவாய் வட்ட ஆய்வாளா், நான் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டி இருப்பதாகவும், வீட்டை உடனடியாக அகற்றாவிட்டால், வீட்டை இடித்து விடுவதாகவும் நிா்பந்தித்து வருகிறாா். இதனால் மாற்று இடம் ஏதும் இன்றி நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, மாற்றுத்திறனாளியாகிய எனக்கு, நான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூா், தலையாமழை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கருங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிா் உதவி தொகை ... மேலும் பார்க்க