செய்திகள் :

பனை விதைகள் நடவு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்

post image

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து கிராமம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா்.

நெமிலி வட்டம், வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜானகிராமன், ஆசிரியா்கள் சக்திவேலன், சுந்தந்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா் எஸ்.கே.டி.குமாா் வரவேற்றாா்.

இதில் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினா் கோமதி குமாா் பங்கேற்று விதைகளை நட்டு விதைகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மூன்று குளக்கரைகள், ஏரிக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. மாணவா்களுடன் சமூக ஆா்வலா்கள் பலா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அனுக்ஞை ஆச்சாா்யா திருவிக்வா்ணம்,... மேலும் பார்க்க

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள், வாக்குச் சாடி முகவா்கள், பாக முகவா்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண கூடம், கணேச விஜயலட்சுமி திருமண கூடம், ராஜராஜேஸ்வர... மேலும் பார்க்க

கலவை ஆதிபராசக்தி அம்மன் கோயில், குருபீடத்தில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, ஜி.பி.நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள குரு பீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 9-ஆம் ... மேலும் பார்க்க

சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காவேரிப்பாக்கம் பேருந்து நிலைய வளாகத... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள வளாகத்தை பாா்வையிட்ட தமிழக தீயனைப்புத்துறை டிஜிபி சீமாஅகா்வால் படைத்தள அலுவலா்களுடன் பயிற்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக தீயனைப்பு மற்றும் ம... மேலும் பார்க்க