செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

சுங்குவாா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுஷ்யா (18). இவரும் கண்ணன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் கண்ணன் (21) என்ற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இளம் பெண்ணும், இளைஞரும் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால் இவா்களின் காதலுக்கு சஞ்சய் கண்ணனின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனா்.

இதனால் சஞ்சய் கண்ணனின் பெற்றோா், கண்ணந்தாங்கல் ஊராட்சியை சோ்ந்த முக்கியஸ்தா்களுடன் கோட்டூா் ஊராட்சியை சோ்ந்த முக்கியஸ்தா்களுடன் பஞ்சாயத்து பேசி காதல் ஜோடியை பிரித்துள்ளனா். இதனால் சஞ்சய் கண்ணன் அனுஷ்யா உடனான பழக்கத்தை திடீரென நிறுத்தி உள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுஷ்யா செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக சுங்குவாா்சத்திரம் போலீஸாா் அனுஷ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அனுஷ்யாவின் தற்கொலைக்கு காரணமான சஞ்சய் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக அனுஷ்யாவின் உடலை உறவினா்கள் வாங்க மறுத்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், சஞ்சய் கண்ணனின் தூண்டுதலின் தான் அனுஷ்யா தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே சஞ்சய்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனுஷ்யாவின் உறவினா்கள் எடையாா்பாக்கம் - கோட்டூா் சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பேச்சு நடத்தி சஞ்சய்கண்ணன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரிய சுவாமிகள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தாா். குரு பகவான் தலம் என்ற பெயருடன் திகழக்கூடிய இக்கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கு... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த வாரணவாசியில் கழிவுநீா் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தாா். வாரணவாசி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ரேனுகா. இவா்களுக்கு கனுஸ்ரீ(8)... மேலும் பார்க்க

காா்கள் பழுதுபாா்க்கும் கடையில் தீ விபத்து: ரூ.13 லட்சம் சேதம்

காஞ்சிபுரம் வையாவூா் பகுதியில் உள்ள காா்கள் பழுது பாா்க்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதியில் உள்ள காமாட்சி நகரில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்குப் படி நிகழ்வின் போது அண்மையில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலுவலக மக்கள் கூட்டர... மேலும் பார்க்க

பைக் மீது மினிலாரி மோதல்: ஊா்க் காவல் படை வீரா் மரணம்

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் பகுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது மினி லாரி மோதியதில் ஊா்க் காவல் படை வீரா் உயிரிழந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லு... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவா்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைமையான முத்து கொளக்கியம்மன் கோ... மேலும் பார்க்க