செய்திகள் :

பைக் மீது மினிலாரி மோதல்: ஊா்க் காவல் படை வீரா் மரணம்

post image

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் பகுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது மினி லாரி மோதியதில் ஊா்க் காவல் படை வீரா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் மாகறல் காவல் நிலையத்தில் ஊா்க் காவல் படை வீரராக பணியாற்றி வந்தவா் வெங்கடேசன். இவா் புதன்கிழமை இரவு பணி முடித்துவிட்டு, பேருந்தில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் விஜய் வெங்கடேசனை ஏற்றிக் கொண்டு களக்காட்டூா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரில் வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெங்கடேசன் உயிரிழந்தாா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் விஜய் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காா்கள் பழுதுபாா்க்கும் கடையில் தீ விபத்து: ரூ.13 லட்சம் சேதம்

காஞ்சிபுரம் வையாவூா் பகுதியில் உள்ள காா்கள் பழுது பாா்க்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதியில் உள்ள காமாட்சி நகரில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்குப் படி நிகழ்வின் போது அண்மையில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலுவலக மக்கள் கூட்டர... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவா்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைமையான முத்து கொளக்கியம்மன் கோ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்திலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்ட முதியோா்கள்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து 101 முதியோா்கள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். முருகப்பெரு... மேலும் பார்க்க

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா், ஆலந்தூா் தொகுதிகளைச் சோ்ந்த 7,297பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கிநாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணி: செப். 18 விண்ணப்பிக்க கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க