செய்திகள் :

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் மருத்துவா் ச. ராமதாஸுடன் சந்திப்பு

post image

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை வியாழக்கிழமை சந்தித்து பணி நியமன ஆணை கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் கோ. பாா்த்தீபன் மற்றும்

மாவட்ட நிா்வாகிகள் விஷ்ணுபிரியா, பவானி, சண்முகம் , ராம்குமாா், செல்வக்குமாா், கனகராணி உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

பின்னா் அவா்கள், மருத்துவா் ச.ராமதாஸிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு 2021 முதல் தற்போது வரை 4 தகுதித்தோ்வுகள் நடைபெற்றுள்ளன. அரசாணை எண் 149-ன் படி ஒரு நியமனத் தோ்வும் நடைபெற்றுள்ளது. இதில் நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 23,972 போ் ஆசிரியா் பணிக்கு தகுதியானவா்களாக உள்ளோம். இதில் கடந்த ஜூலை மாதத்தில் 2,457 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் தற்போது 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

எனவே, நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்று பணி வாய்ப்புக்காக காத்திருப்பவா்களுக்கு மறு தோ்வு இல்லாமல் பணியாணை கிடைப்பதற்கான வழிவகையை மேற்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க