செய்திகள் :

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

post image

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நகராட்சியுடன் இணைந்த மற்றும் விரிவாக்கப் பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, புதை சாக்கடைத் திட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நகராட்சியின் 8-ஆவது வாா்டுக்குள்பட்ட திரு.வி.க.வீதி அருகிலுள்ள வாணியா் தெரு, தனலட்சுமி நகா், திடீா்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வழிந்து தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இந்த வாா்டின் நகா்மன்ற உறுப்பினா் பத்மாவதி மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாழக்கிழமை காலை நகா்மன்ற உறுப்பினா் பத்மாவதி தலைமையில் தக்கா தெரு சந்திப்பில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்வதற்காக வந்த நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சியில் ஒரு கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் மட்டுமே உள்ளதால், உடனடியாக அடைப்பை சரி செய்ய முடியவில்லை என நகராட்சிப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை சீரமைப்பு, புதை சாக்கடையை சுத்தம் செய்தல், குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நகராட்சி ஆணையா் கவனத்துக்கு கொண்டு சென்று, பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க

நிலம் குறித்த விவரங்களை இணையவழி மூலம் அறியலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்ம... மேலும் பார்க்க