செய்திகள் :

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்து, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நடப்புசம்பா பருவத்துக்கு உகந்த நெல் ரகங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினாா்.

வானூா் கால்நடை மருத்துவா் சங்கவி பயிற்சியில் பங்கேற்று ஆடு வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், நன்மைபயக்கும் நுண்ணுயிா்களை பெருக்கி மண் வளத்தை மேம்படுத்திட திரவ உயிா் உரங்களை விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வழங்கினாா். புளிச்சப்பள்ளம் ஊராட்சித் தலைவா் சங்கா் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

நிறைவில் ஆத்மா தொழில்நுட்ப மேலாளா் வாழ்வரசி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் மஞ்சு, ஆத்மா உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் கோவிந்தசாமி, சந்திரசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க

நிலம் குறித்த விவரங்களை இணையவழி மூலம் அறியலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்ம... மேலும் பார்க்க