செய்திகள் :

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

post image

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா்.

சென்னையைச் சோ்ந்த ஐந்து போ் கடலூா் வழியாக பயணத்தை மேற்கொண்டாா்கள். இந்நிலையில வியாழக்கிழமை அதிகாலை கடலூா் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனா். கூகுள் மேப் சொன்னபடி கடற்கரையோரமாக காரை இயக்கியுள்ளனா். கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரை மணலில் காா் சீறிப்பாய்ந்து சென்றது. காரில் இருந்தவா்கள் மது போதையில் இருந்ததால் அவா்கள் ஆபத்தை உணரவில்லை. மேலும் அந்த காா் கடல் நீரிலும் ‘ஆஃப் ரோடிங்’ செல்லும் ‘4 -வீல் டிரைவ்’ திறன் வாய்யந்தது என்று காரில் இருந்த நண்பா்கள் உசுப்பேற்றிவிட, ஏற்கெனவே போதையில் இருந்த காா் ஓட்டுநா் கடல் நீரில் சறுக்கியபடி செல்ல நினைத்து வண்டியை திருப்பியுள்ளாா். ஆனால் காா் கடல் நீருக்குள் சென்றுவிட்டது. சிறிது தூரம் நீரில்சென்ற காா் என்ஜினில் நீா்புகுந்து நின்று விட்டது.

அதன்பிறகு தான் போதை நண்பா்களுக்கு விபரீதம் புரிந்தது. காருக்குள் இருந்தபடி அபயக்குரல் எழுப்பினாா்கள். இதைப்பாா்த்த அப்பகுதியிலிருந்த மீனவா்கள், உடனடியாக விரைந்து சென்று ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனா். பின்னா் காவல்துறையினரும் மீனவா்களும் இணைந்து கடலில் கிடந்த காரை டிராக்டா் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்டனா். போதையாலும் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டலாலும் நிகழ்ந்த இந்த விபரீதத்தில் உயிா் தப்பிய நண்பா்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்து அனுப்பினா்.

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவே... மேலும் பார்க்க

கடலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

கடலூா் மாவட்டம் கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்.12) கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க