செய்திகள் :

கடலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

post image

கடலூா் மாவட்டம் கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்.12) கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கிட ஒருங்கிணைக்கும் பணியினை கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து செப்.12-இல் கடலூா், கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்கும் அக்கல்லூரியின் முதல்வா் கல்விக்கடன் வழங்குதல் தொடா்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவாா். கல்விக் கடன் கோரும் மாணவ, மாணவியா்கள் ட்ற்ற்ல்//ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ள்ற்ன்க்ங்ய்ற்ள் என்ற இணையத்தை பயன்படுத்தலாம்.

உரிய ஆவணங்களுடன் மேற்படி முகாம்களில் சாதிச்சான்று, வருமானச்சான்று தேவைப்படும் விண்ணப்பதாரா்களுக்கு இணையவழியில் உடனடியாக சான்றுகள் வழங்கிட எதுவாக மேலாளா், மாவட்ட மின்ஆளுமை மற்றும் அனைத்து வங்கிகளை ஒருங்கிணைத்து உதவி மையம் அமைத்திடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவா்கள் உரிய ஆவணங்களுடன் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கல்விக் கடன் பெற்றிட விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவே... மேலும் பார்க்க

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா். சென்னையைச் சோ்ந்த ஐந்து போ்... மேலும் பார்க்க