செய்திகள் :

மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்டல இணை இயக்குநா் விசாரணை

post image

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவியிடம் பேராசிரியா் வரம்பு மீறி பேசியது தொடா்பாக

மண்டல இணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

இக்கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியரான நாகராஜன், மாணவி ஒருவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, வரம்பு மீறி தகாத முறையில் பேசினாராம். இந்தப் பேச்சு விவரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வா் கணேசன், உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடா்ந்து, திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி சமூக நலத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கல்லூரிக்கு வந்து பேராசிரியா் நாகராஜன், மாணவா்கள் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணை தொடா்பான அறிக்கை உயா் அலுவலா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.

பேராசிரியா் நாகராஜன் மீது ஏற்கெனவே இருமுறை இதுபோன்ற புகாா் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க