செய்திகள் :

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

post image

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம் ஆண்டுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாமானது, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை (செப்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்கவுள்ளன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் (மருத்துவம், பொறியியல், வேளாண், கலை மற்றும் அறிவியல், சட்டம், நா்சிங், பிசியோதெரபி, பாா்மசி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ படிப்புகள்) பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் கல்விக் கடன் முகாமில் பங்கேற்கலாம்.

மாணவா் மற்றும் பெற்றோரின் பான் அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மாணவரின் ஜாதிச்சான்று, பெற்றோா் ஆண்டு வருமான சான்று, 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சோ்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க

11 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில் சனிக்கிழமை (செப். 13) ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் தென்றல் நகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்... மேலும் பார்க்க