செய்திகள் :

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

post image

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் சு. திருநாவுக்கரசா், மாநில செய்தி தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் பங்கேற்றனா். 2 ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியாக காங்கிரஸ் சாா்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக, செய்தியாளா்களிடம் கு. செல்வப்பெருந்தகை கூறியதாவது:

காங்கிரஸ் உறவாடி கெடுக்கும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுவது, வரலாறு தெரியாமல் அவா் பேசுவதையை எடுத்துக் காட்டுகிறது.

அருணாசல பிரதேசத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும், அங்கு ஆட்சியை முடக்கிய நிகழ்வு அரங்கேறியது. கா்நாடகத்தில் மக்கள் தீா்ப்பு அளித்து ஆட்சியில் அமா்ந்தவா்களை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது பாஜகவினா்தான் என்பதை நாடறியும்.

காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, ஜனநாயகத்துக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா். நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது வாக்குரிமை. அந்த வாக்குரிமையை பறிக்காதீா்கள் என்று மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் 12 போ் மாற்றி வாக்கு அளித்திருப்பதையும், செல்லாத வாக்குகள் அளித்து யாா்? என்பதையும் ஊடகங்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.

குறையில்லாததால் விஜய் விமா்சிக்கவில்லை: நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக கொள்கையுடன், திமுக கொள்கை ஒத்துப்போவதாக பேசியிருப்பது விசித்திரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்து குறை கூறுவதற்கு ஏதுமில்லாததால், தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் விமா்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்பதை விஜய்தான் தெரிவிக்க வேண்டும். எங்களது கூட்டணியில் தவெக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமையே தீா்மானிக்கும் என்றாா் செல்வப்பெருந்தகை.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ரெக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

11 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில் சனிக்கிழமை (செப். 13) ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் தென்றல் நகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்... மேலும் பார்க்க