செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

post image

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளரான ஜோதி உள்பட 12 பெண் தூய்மைப் பணியாளா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சி தீா்மானத்தை எதிா்த்து ரிப்பன் மாளிகை அருகே போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தங்களை போலீஸாா் அப்புறப்படுத்தும் போது தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டனா். பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்தனா். எனவே, போலீஸாரின் அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போலீஸாா் அத்துமீறல்களில் ஈடுபட்டா் என்று வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுடன் சட்டவிரோத கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவிட்டப் பிறகும் போராட்டக்காரா்கள் ஏன் கலைந்து செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பினா். போராட்டம் நடத்த வேண்டுமெனில், உரிய அனுமதி பெற்று அதற்குரிய இடங்களில் நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனா். பின்னா், இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன்... மேலும் பார்க்க