செய்திகள் :

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

post image

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் தேதி இந்த ரயிலை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா். மறுமாா்க்கத்தில் ஈரோட்டிலிருந்து செப்.18-ஆம் தேதி காலை இந்த ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 8 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 11 தூங்கும் வசதியுடைய பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன்... மேலும் பார்க்க