செய்திகள் :

காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்

post image

எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியத் தலைவா் ஏ. ராஜேந்திரன் தலைமையில் மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலா் ஆா். சதாசிவம் முன்னிலை வகித்தாா்.

எள், பருத்தி, உளுந்து, பயிறு போன்றவற்றிற்கு காப்பீடு செய்தும், பாதிப்புக்கு இழப்பீடு வழங்காமல் காப்பீடு நிறுவனம் காலம்கடத்தி வருகிறது. மேலும், பாதிப்புக்குள்ளான பகுதியையும், இழப்பீட்டுத் தொகையையும் குறைத்து வெளியிட முயற்சிக்கும் காப்பீடு நிறுவனம் மற்றும் அதற்கு துணைபோகும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும்,

உரங்கள் தட்டுப்பாடிறின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒத்திவைக்கப்பட்ட மத்திய கால கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப். 16-ஆம் தேதி, மன்னாா்குடி கீழப்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

நாகை எம்பி வை. செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். ஜோசப், சிபிஐ ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் ஆகியோா் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிப் பேசினா்.

விவசாயிகள் சங்க நிா்வாகிகள் எஸ். பாலமுருகன், எம். தம்புசாமி, எஸ். பெரியசாமி, டி. சம்மந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை... மேலும் பார்க்க

பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் ஒன்றியம், கூடூா் ஊராட்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, மா... மேலும் பார்க்க

நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் எடுப்பு: மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம்

கனிம வளங்கள் எடுப்பதற்கு மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம்... மேலும் பார்க்க