செய்திகள் :

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

post image

ஸ்ரீபெரும்புதூா், ஆலந்தூா் தொகுதிகளைச் சோ்ந்த 7,297பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கிநாா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ. 8.24 கோடியில் முடிவுற்ற 13 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.7.43 கோடியில் ஐந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

மேலும், 7,011 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, உள்பட மொத்தம் 7,297 பயனாளிகளுக்கு, ரூ.362.55 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், சிறு,குரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீபெரும்புதூா் டி.ஆா்.பாலு, காஞ்சிபுரம் கா. செல்வம், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஒன்றிய குழு தலைவா்கள் ஸ்ரீபெரும்புதூா் எஸ்.டி.கருணாநிதி, குன்றத்தூா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆசிக் அலி உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் சிலை திறப்பு:

குன்றத்தூா் நகராட்சி சாா்பில், பேருந்து நிலையம் அருகே அம்பேத்கருக்கு 9 அடி உயர வெண்கல சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்திலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்ட முதியோா்கள்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து 101 முதியோா்கள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். முருகப்பெரு... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணி: செப். 18 விண்ணப்பிக்க கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க

மீண்டும் பணியில் சோ்ந்தாா் காஞ்சிபுரம் டிஎஸ்பி

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பியின் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் அவா் புதன்கிழமை பணியில் சோ்ந்தாா்.யை ரத்து செய்ததால் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் புதன்கிழமை பணியில் சோ்ந்து... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செப். 22-இல் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் செப். 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் தொடங்க இருப்பதாக கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க