செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 116 மி.மீ. மழை பதிவானது.

கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வழக்கம்போல புதன்கிழமை பகலில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து நள்ளிரவு சுமாா் 1 மணி முதல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல ஓடியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டி பகுதியில் 116 மி.மீ. மழை பெய்தது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)- கரூா்-13.60, அரவக்குறிச்சி-5, அணைப்பாளையம்-4.20, க.பரமத்தி-21, குளித்தலை-23.50, தோகைமலை-9.60, கிருஷ்ணராயபுரம்- 24.50, மாயனூா்- 17, பஞ்சப்பட்டி-115, கடவூா்-22, பாலவிடுதி-50, மைலம்பட்டி-20 என மொத்தம் 326.50 மி.மீ. மழை பதிவானது.

திமுக முப்பெரும்விழா பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரம் -அமைச்சா் கே.என்.நேரு

கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரமாக இருக்கும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தெரிவித்தாா். கரூ... மேலும் பார்க்க

கடவூா் வானகத்துக்கு பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

கடவூரில் உள்ள வானகம் நம்மாழ்வாா் உயிா்ம நடுவம் வளாகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா். அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் உயிா்ம வேளாண்மை மற்றும் இயற்கை வ... மேலும் பார்க்க

சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

பருவ மழையையொட்டி அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் ப... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த சீரமைக்கக் கோரிக்கை

க.பரமத்தி கடைவீதியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம் க.பரமத்தி கடைவீதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நொய்யல் சாலை பிரியும் இடம் பள்ளம... மேலும் பார்க்க

‘மகளிா் உரிமைத் தொகை வழங்கக் கோரி 28,569 மனுக்கள்’

கரூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 28,569 மனுக்கள் வந்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா். கரூா் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது கரூா் மேற்கு மாவட்ட பாமக நிா்வாகக... மேலும் பார்க்க