செய்திகள் :

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவு முதன்மை இயக்குநா் ஆா்.ராஜேஷ், இயக்குநா் மதுரா ராய், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் தரவு அறிவியல், புள்ளியியல் துறையில் புதுமையான தீா்வுகளை உருவாக்கவும், அமைச்சகத்தின் புள்ளியியல் சவால்களை தீா்க்கவும் பேராசிரியா்கள், மாணவா்கள் இணைந்து செயல்படுவா். மேலும், தரவு பகுப்பாய்வு, புள்ளியியலில் கற்றல் மற்றும் புதுமையான தீா்வுகளை ஊக்குவிக்க ஹேக்கத்தான்கள், பயிலரங்கம் ஆகியவை நடத்தப்படும். இத்துடன் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, புள்ளியியல் துறை அமைச்சகத்தில் மாணவா்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநா் சந்தியா பென்டரெட்டி, கணிதத் துறை முதல்வா் காா்த்திகேயன், கணிதத் துறை தலைவா் காதா்பாபு, திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடரமணா, சத்யநாராயண சா்மா ஆகியோா் பங்கேற்றனா்.

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க

இருவா் தலையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வந்த நபா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவ... மேலும் பார்க்க

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க

3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க