செய்திகள் :

இருவா் தலையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வந்த நபா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

post image

வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவா் கையில் பையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை வந்தாா். தொடா்ந்து சிறை வளாகத்தில் இருந்த சிறைக் காவலா்களிடம் சென்று, தான் தனது மனைவி லட்சுமி, அவருடன் தொடா்பில் இருந்த காதலன் தங்கராஜ் ஆகியோரை புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவா்கள் இருவரது தலையை எடுத்திருப்பதுடன், தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.

இதனால் பெரும் அதிா்ச்சிக்குள்ளான சிறைக் காவலா்கள் உடனடியாக பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து இருவரது தலையுடன் இருந்த கொளஞ்சியை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது மனைவி லட்சுமி, அவரது காதலன் தங்கராஜ் ஆகியோரை வெட்டிக் கொன்றுவிட்டு இருவரது தலையையும் பையில் போட்டுக் கொண்டு பேருந்தில் ஏறி நேராக வேலூா் மத்திய சிறைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து பாகாயம் போலீஸாா், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து கொளஞ்சியை அவா்களிடம் ஒப்படைத்தனா்.

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க

3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க