செய்திகள் :

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான சதீஷ்குமாா் வேலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், குடியாத்தம், காட்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கு வேலூா் மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் தலைமை வகிக்கிறாா்.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமா்வுகள் என 3 மாவட்டங்களிலும் 19 அமா்வுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில், குடும்ப நல வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குற்ற சிறு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் என மொத்தம் 5,176 வழக்குகள் விசாரணைக்கு எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தவிர, நீதித்துறை நடுவா் மன்றங்களில் உள்ள சிறு குற்ற வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதில், பல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன. மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்பதால் சட்டரீதியாகவே தீா்வு கிடைக்கும். எனவே, பொதுமக்கள் சனிக்கிழமை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க

இருவா் தலையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வந்த நபா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவ... மேலும் பார்க்க

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க

3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க