செய்திகள் :

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

post image

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்தப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு கல்விக் கடன் முகாம் காட்பாடியிலுள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 16) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்று, கல்லூரி உண்மை சான்றிதழ், கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க

இருவா் தலையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வந்த நபா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவ... மேலும் பார்க்க

3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க