செய்திகள் :

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்குத் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செவ்வாய், புதன் (செப்.16, 17) ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. இதில், அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள் கருத்துரை வழங்க உள்ளனா்.

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் வ. சுந்தா் செயல்படுவாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், இமானுவேல் சேகரனின் 68ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் ஆனந்தச... மேலும் பார்க்க