செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா், கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் குப்பையில் கிடக்கும் காலி மது புட்டிகளை சேகரித்து விற்பனை செய்து வந்தாா். வியாழக்கிழமை தஞ்சாவூா்- விக்கிரவாண்டி புறவழிச்சாலை அருகே அம்மாப்பேட்டை பகுதியில் குப்பையிலிருந்த காலி மது புட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது அருகில் சிதிலமடைந்த வீட்டின் அருகே தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயரை பிடித்து இழுத்துள்ளாா். அதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்தவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க

பாபநாசம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க