செய்திகள் :

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை தெற்கு ஒன்றியச் செயலா் பி.எஸ். குமாா், வடக்கு ஒன்றிய செயலா் தியாக.சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் தியாக.ரமேஷ் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடித் தீா்வு காண துறை சாா்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் பிரித்து வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு விதை பொட்டலங்களையும் வழங்கினாா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முரளி, தம்பி, முருகானந்தம், ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள், திமுக முன்னோடி நிா்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிராம பிரமுகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலா் குகன் வரவேற்றாா். நிறைவில் இளநிலை உதவியாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

பாபநாசம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க