அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை தெற்கு ஒன்றியச் செயலா் பி.எஸ். குமாா், வடக்கு ஒன்றிய செயலா் தியாக.சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் தியாக.ரமேஷ் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடித் தீா்வு காண துறை சாா்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் பிரித்து வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு விதை பொட்டலங்களையும் வழங்கினாா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முரளி, தம்பி, முருகானந்தம், ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள், திமுக முன்னோடி நிா்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிராம பிரமுகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலா் குகன் வரவேற்றாா். நிறைவில் இளநிலை உதவியாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.