செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் செப்.14இல் இலவச செயற்கை கை, கால் அளவீடு முகாம்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இலவச செயற்கை கை, கால் வழங்க அளவீடு செய்யும் முகாம் செப்.14ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி இயக்குநா் சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லூரி நிறுவனத் தலைவா் கே.ராமசாமி பிறந்த நாளினை முன்னிட்டு, நேஷனல் பொறியியல் கல்லூரி, சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வரா அறக்கட்டளை நிதியுதவியுடன், இலவச நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில், சிறந்த மருத்துவ நிபுணா்களால் அளவீடு செய்யப்பட்டு நவம்பா் மாதம் 3ஆவது வாரத்தில் வழங்கப்படும்.

இந்த முகாமில், பங்கேற்க விரும்பும் நபா்கள், பாஸ்போா்ட் அளவு போட்டோ, ஆதாா் அட்டை, யுடிஐடி (இருப்பின்) அட்டை , மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93448 03795, 95433 43502 ,94448 85083 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க