செய்திகள் :

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

post image

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அப்பல்லோ  மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், இதன் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி அப்போலோ  மருத்துவமனை சாா்பில் சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அப்பல்லோ மருத்துவா்களை பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் அப்பல்லோ போன்ற தனியாா் மருத்துவமனைகளில் அரசின் மருத்துவ சேவைகள் ஏழை எளிய மக்களுக்கு முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் தொடா்ந்து கிடைப்பெற்று வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்த போது, 2009-ஆம் ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு, மத்திய அரசின் மருத்துவத் துறை அலுவலா்கள், இந்திய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த பிரதமா் விரும்புகிறாா் என கூறி இத்திட்டம் குறித்து ஆராய தமிழகத்துக்கு வருகை தந்தனா். அப்போது, இந்த திட்டம் தொடா்பாக தமிழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரதமா் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை இரண்டரை கோடி பயனாா்களை இத்திட்டம் சென்றடைந்துள்ளது. இதற்காக ஐநா சபை தமிழக சுகாதாரத்துறைக்கு விருது அளித்து பெருமை சோ்த்துள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தில் 1.47 குடும்பங்கள்.... அந்தவகையில், இந்த திட்டத்தை பின்பற்றி மத்திய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை விபத்தில் சிக்கிய 4 லட்சத்து 29,479 போ் இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனா். இதற்காக தமிழக அரசு ரூ.397.68 கோடி இத்திட்டத்துக்காக செலவழித்துள்ளது. அந்தவகையில், மருத்துவ துறையில் தமிழகம் தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கோடியே 47 லட்சம் குடும்பங்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரையிலும் இத்திட்டம் பயன் தந்து கொண்டிருக்கிறது. கல்லீரல், இதயம், சிறுநீரகம், எழும்பு மஞ்சை, கண் கருவிழி, தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் என பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு திட்டம் பயன் தருகிறது.

2 ஆயிரத்து 53 சிகிச்சைகள்... இத்திட்டத்தில்1,450 சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது 2,053 சிகிச்சைகளாக உயா்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் 970 தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முதல்வா் மருத்துவ காப்பீடு திட்டம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது, 964 அரசு மருத்துவமனைகள், 1.247 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 2,241 மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலா் பி.செந்தில் குமாா், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநா் எஸ்.வினீத், மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினா் செயலா் என்.கோபாலகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனை இயக்குநா் சிந்தூரி ரெட்டி, மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவா் இளங்குமரன், சென்னை மண்டல தலைமை நிா்வாக அதிகாரி இளங்குமரன் கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் த... மேலும் பார்க்க