செய்திகள் :

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

post image

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனமும் எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தாலும், அவற்றையெல்லாம் இஸ்ரேல் கண்டுகொள்வதாகவேயில்லை.

இந்த நிலையில், பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜெருசலேம் அருகேயுள்ள மாலே அடுமிம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நெதன்யாகு பேசுகையில், ``பாலஸ்தீனிய அரசு என்ற ஒன்று எப்போதும் அமையாது என்ற நமது வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம். இந்த இடம் நமக்கே சொந்தம்.

நமது பாரம்பரியம், நிலம், பாதுகாப்பு ஆகியவற்றை நாம் உறுதி செய்வோம். இந்த நகரத்தின் மக்கள்தொகையையும் இரட்டிப்பாக்குவோம்’’ என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியும் ஒரு சர்ச்சைக்குள்ளான பகுதியாகவே இருந்து வருகிறது.

வெஸ்ட் பேங்க் பகுதியில் ஜெருசலேமுக்கும் - பாலஸ்தீனத்தின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பாதைக்கும் அருகே அமைந்துள்ள மாலே அடுமிம் பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்த இஸ்ரேல் நீண்டகாலமாகவே முயற்சி செய்து வருகிறது. மேலும், இந்தப் பகுதிக்குச் செல்லும் இஸ்ரேல் மக்களுக்கு ஊக்கத் தொகையையும் அந்நாடு வழங்குகிறது.

இருப்பினும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கும் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அதனை இஸ்ரேல் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், மாலே அடுமிம் அருகே சுமார் 12 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இ1 (E1) எனும் நிலப்பரப்பில் குடியிருப்புகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போதுதான், `பாலஸ்தீனத்தின் அரசு அமையாது’ என்று நெதன்யாகு தெரிவித்தார்.

இதையும் படிக்க:சார்லி கிர்க் கொலை: குற்றவாளி பற்றித் தகவல் தந்தால் 1 லட்சம் டாலர்!

‘There will be no Palestinian state’: Israel PM Netanyahu

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனு... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளம்: படகு கவிழ்ந்து 10 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடு... மேலும் பார்க்க

நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!

பிரிட்டனைச் சேர்ந்த Vlogger - வீலாகர் (காணொளிப் பதிவர்) நேபாளத்தில் நடந்த கலவரத்தை விடியோவாக பதிவிட்டு வைரலாகியுள்ளார். சுற்றுலாச் சென்றவருக்கு வரலாற்று நிகழ்வினைப் படம்பிடிக்கும் அனுபவம் கிடைத்ததாக ச... மேலும் பார்க்க

நேபாளத்தில் தப்பியோடிய 67 கைதிகள் இந்திய எல்லையில் கைது!

நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பியோடிச் சென்று, இந்திய- நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 67 கைதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள அரசால் சமூக... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிக... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்பு!

அமெரிக்காவில் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரு... மேலும் பார்க்க