செய்திகள் :

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

post image

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வந்த வரதராஜன் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமி தாரிசனம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ரயில் பாம்பன் பாலத்தில் சென்ற நிலையில் பாம்பன் சாலை பாலத்தினை காண வரதராஜன் ரயில் பெட்டியின் கதவின் அருகே எழுந்து சென்றுள்ளார். அங்கு கதவை திறந்து வைத்தபடி பாம்பன் பாலத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

தூக்கு பாலம் வழியே செல்லும் ரயில்
உயிர் பிழைத்த வரதராஜன்

அப்போது வரதராஜனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்து கடலில் விழுந்துள்ளார். கடல் நீரில் விழுந்த வேகத்தில் வரதராஜனுக்கு மயக்கம் தெளிந்ததை தொடர்ந்து அருகில் இருந்த பாறையினை பிடித்தபடி உயிர்பிழைக்க கூக்குரலிட்டுள்ளார். மழை மேகத்துடன் கூடிய இரவு நேரம் என்பதால் கடல் பாறையின் மீது கிடந்த இவர் யார் கண்ணிலும் படவில்லை. இதனால் இரவு முழுவதும் ஆக்ரோஷமான அலைகளுக்கு மத்தியில் வரதராஜன் விடிய விடிய உயிர் பயத்துடன் கடலின் நடுவேயே இருந்துள்ளார்.

ஆழம் நிறைந்த கடல் பகுதியில் விழுந்ததால் வரதராஜனுக்கு சிறு காயம் கூட ஏற்படாத நிலையில், காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு இன்று காலையில்தான் நிறைவேறியுள்ளது. காலையில் அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாறையின் நடுவே நடுங்கியபடி இருந்த வரதராஜனை மீட்டனர். பின்னர் பாம்பனில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அவருக்கு மாற்று உடை கொடுத்து உதவினர். இதன் பின்னர் வரதராஜன் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

பாம்பன் ரயில் பாலத்தில் பயணம் மேற்கொண்ட இளைஞர் கடலின் ஆழமான பகுதியில் தவறி விழுந்ததால் சிறிய காயமின்றி உயர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழ... மேலும் பார்க்க

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப... மேலும் பார்க்க

கர்நாடகாவில் கோர விபத்து; விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இர... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்... மேலும் பார்க்க