செய்திகள் :

என்ஜின் கோளாறு! ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயில்!

post image

என்ஜின் கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயிலால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

கர்நாடக மாநிலம், மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு பெங்களூர் காட்பாடி, ஆகிய ரயில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையங்களில் நின்று சென்னை ரயில் நிலையத்திற்கு இரவு 7.20 மணியளவில் சென்று அடைகிறது. இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் மதியம் 1.05 மணியளவில் மைசூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்று மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பச்சூர் ரயில் நிலையம் அருகே மாலை 4.40 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் ரயிலில் இருந்த உதவி என்ஜின் ஊழியர்கள் பழுதான ரயிலை சரிசெய்து மாலை 5.58 மணியளவில் சென்னை நோக்கி கிளம்பியது. ரயில் புறப்பட்டு சில தூரத்தில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே மீண்டும் என்ஜின் கோளாறால் நடுவழியில் நின்றது.

விஜய்யை எதிர்க்கவில்லை, கேள்விதான் கேட்கிறேன்: சீமான்

உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகள் கர்நாடக மாநிலம், பெங்களூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து மாற்று வந்தே பாரத் ரயில் என்ஜினை வரவழைத்து 8.15 மணியளவில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. இதனால் ரயில் பயணிகள் மூன்று மணி நேரமாக அவதிப்பட்டனர்.

Passengers faced a lot of inconvenience as the Vande Bharat train was stopped for 3 hours near Jolarpettai due to an engine fault.

விஜய்யை எதிர்க்கவில்லை, கேள்விதான் கேட்கிறேன்: சீமான்

தான் விஜய்யை எதிர்க்கவில்லை, கேள்வித்ன் கேட்கிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெரம்பலூரில் அவர் அளித்த பேட்டியில், விஜய்யை எதிர்க்கவில்லை. நான் கேள்விதான் கே... மேலும் பார்க்க

உங்கள் அப்பா ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை: திருவாரூரில் விஜய்

திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தவெக தலைவர் விஜய் பேசுகையில்,``திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? ரொம்ப நாளாக... மேலும் பார்க்க

தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டு பெருமிதம்!

தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) வெளியிட்டுள்ளதொரு விடியோவில் தெரிவித்திருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள... மேலும் பார்க்க

கருவலூரில் கட்டுமானப் பணியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூர் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு கட்டட தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே உப்பில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,... மேலும் பார்க்க

எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்: விஜய்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

நாகூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா... மேலும் பார்க்க