செய்திகள் :

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்

post image

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:

வரதட்சிணை பழக்கம் அடியோடு மறைய வேண்டுமென்றால், கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அவா்களது குடும்பங்களில் இருந்து இந்த மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது மோடி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து பழிவாங்குகின்றனர். அண்ணாமலை லண்டனுக்கு சென்று தான் அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கம்யூனிஸ்ட்களை பார்த்து, முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள், திமுக உங்களை விழுங்கிவிடும் என்கிறார். திமுக பாம்பும் இல்லை, திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சி தவளையும் இல்லை. அவா் தான் அதிமுகவை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவா்களை பாஜக விழுங்கிவிடும்.

அதிமுக கட்சி உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார். அவருடைய வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது.

எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு. கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம் என்றாா்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

U. Vasuki, a member of the Political Leadership Committee of the Communist Party of India-Marxist, said that Amit Shahs house is a court for the ADMK.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூ... மேலும் பார்க்க

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டிருந்த நிலையில், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செய... மேலும் பார்க்க

2026 ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தி படம் ‘ ஹோம்பவுண்ட் ’ தேர்வு!

இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் (HOMEBOUND)’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஹிந்தியில் விக்கி கௌசலின் மசான் படத்தை இயக்கியிருந்த நீ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு!: முதல்வர் ஸ்டாலின்

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (செப்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அள... மேலும் பார்க்க

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் புதிய வடிவமைப்புகளுடன... மேலும் பார்க்க