செய்திகள் :

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

post image

அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில் வீடு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்கத் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அரவிந்த் கேஜரிவாலுக்கு தங்குமிடம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதி சச்சின் தத்தா முன் சமர்ப்பிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர், ஆம் ஆத்மி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகுல் மெஹ்ரா, கடந்த காலங்களில் கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட தங்குமிடத்திலிருந்து தரம் தாழ்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்று வாதிட்டார்.

ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தில் திருப்தி அடையவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி மற்றும் கேஜரிவால் அரசை அணுக சுதந்திரம் உண்டு என்று நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்கு பொருத்தமான தங்குமிடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அக்டோபர் 4, 2024 அன்று கேஜரிவால் ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார்.

அப்போதிலிருந்து, அவர் மண்டி ஹவுஸுக்கு அருகிலுள்ள மற்றொரு கட்சி உறுப்பினரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Centre on Thursday informed the Delhi High Court that it will allot an appropriate accommodation to AAP national convenor Arvind Kejriwal within ten days.

இதையும் படிக்க:மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

புது தில்லி: இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை ... மேலும் பார்க்க

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு! ராகுல் வாக்குறுதி

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற... மேலும் பார்க்க

யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!

புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்க... மேலும் பார்க்க

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் ... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை! 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்!

ரயிலில் இருந்து அக்னி - பிரைம் ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளது.இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பா... மேலும் பார்க்க

லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து ... மேலும் பார்க்க