விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சி கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்.29 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 2,400-க்கம் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ஜிஎஸ்டி கட்டமைப்பு சீர்திருத்தங்களால் இந்தியாவின் வளர்ச்சிக்குப் புதிய சிறகுகரள வழங்கும், மக்களுக்கு அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கண்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. மேலும் ரஷியாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உ.பி.யில் நிறுவப்படும்.