செய்திகள் :

Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

post image

சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறி பணியாற்றி வந்திருக்கின்றனர் கட்டுமான தொழிலாளர்கள். திடீரென்று சாரம் நிலைகுலைந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் மிகுந்த காயமடைந்திருக்கின்றனர்.

அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையம்

இந்தச் சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பணியாற்றியவர்களில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் என்றும் பலியாகியிருக்கும் 9 பேரும் வடமாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர்: ``நிபந்தனையை மீறி செயல்பட்டார் விஜய்'' - காவல்துறையின் FIR சொல்வது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரைதவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தி... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 41 பேர் பலி, கதறி அழுத உறவுகள்; நெஞ்சை உலுக்கிய சோகக் காட்சிகள்

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலிகரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-... மேலும் பார்க்க

மும்பை: கடல் சுரங்கப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்; புகை மண்டலத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் கடலி... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மாலில் லிஃப்ட் விபத்து; உடல் நசுங்கி ஊழியர் பலி - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழ... மேலும் பார்க்க

நெல்லை: ஒரே நாளில் 14 பேரை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் க... மேலும் பார்க்க