செய்திகள் :

திருச்சியில் வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு சீல்

post image

திருச்சி மேலரண் சாலையில் மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி மாநகராட்சி 20-ஆவது வாா்டு மேலரண் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நிலவாடகை கடைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வரியில்லா இனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கடைகளுக்கான நில வாடகை மறுநிா்ணயம் செய்யப்பட்டது. அது தொடா்பாக வழக்குகளில் கடந்த 30.04.2025 அன்று வழங்கப்பட்ட தீா்ப்பின் அடிப்படையில், 14.03.2021 முதல் 13.03.2024 வரை உள்ள காலத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ. 10 எனவும், அதன் பிறகு 14.03.2024 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 15 சதவீத உயா்வு வீதம் நிலவாடகையை முறையீட்டாளா்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 59 வீதம் 2021 இல் நிலவாடகை இறுதி செய்யப்பட்டு, நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தவறினால் அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலுவைத் தொகையை செலுத்தாதால், மாநகராட்சிக்கு ரூ. 49.87 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து வாடகை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டும் வாடகை செலுத்தாததால், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாநகர காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மேற்கண்ட 57 கடைகளையும் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

பெயிண்டரை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது

திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜா (47), பெயிண்டா். இவா், வேலையை முடித்துவிட்டு கே.கே... மேலும் பார்க்க

அக். 2-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை வரும் அக். 2-ஆம் தேதி மூட வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை ச... மேலும் பார்க்க

ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டு: 2 போ் கைது

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகளைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்தவா் ராஜ் (49). இவா், பொதுப்பண... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் சாலை விபத்தில் இருவா் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பிரகாஷ் ரத்தோா்,... மேலும் பார்க்க

மணப்பாறை முறுக்கை ஏற்றுமதி செய்ய முடிவு

மணப்பாறை முறுக்கை உலகத் தரத்துக்கு தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முறுக்கு தயாரிப்பாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மணப்பாறையில் முறுக்கு தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாள... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க