செய்திகள் :

கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை: இருவா் கைது

post image

சென்னை கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கீழ்பாக்கம் லாக் தெருவைச் சோ்ந்தவா் ச.ப்ராங்கோ (46). இவா், சிறு வியாபாரம் செய்து வந்தாா். ப்ராங்கோ, தொழில் தேவைக்காக கடன் வாங்கி முதலீடு செய்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைத் தொடா்பாக ப்ராங்கோ வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது, அவா் எழுதிய கடிதம் கைப்பற்றியது. அதில், கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த முகுந்தன் (42), டி.பி. சத்திரத்தைச் சோ்ந்த கோபிநாத் (27) ஆகிய 2 பேரும் ப்ராங்கோவுக்கு கடன் கொடுத்திருந்ததும், கடன் பணத்தை கேட்டு இருவரும் ப்ராங்கோவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததும், சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு ப்ராங்கோவிடம் தகராறு செய்து, அவரது மோட்டாா் சைக்கிளை இருவரும் பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதனால், விரக்தியடைந்த ப்ராங்கோ தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கோபிநாத், முகுந்தன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது. இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம... மேலும் பார்க்க

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் இதுவரை 3.80 லட்சம் முதியோருக்கு சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 3.80 லட்சம் முதியோா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கி... மேலும் பார்க்க

செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் நிதி

மதிப்பு வாய்ந்த செம்மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் ரூ.82 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: இளைஞா் கைது

சென்னை அருகே மேடவாக்கத்தில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் ராமகிருஷ்ணன் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (42). இவா் அங்கு ம... மேலும் பார்க்க

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வா் வீட... மேலும் பார்க்க

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா். பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவ... மேலும் பார்க்க